அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. ஒட்டுமொத்த திரையுலகை ஸ்தம்பிக்க வைத்த கேரள சினிமா பிரபலங்கள்!!!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில், மலையாளத் திரையுலக பிரபலங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் படங்களைத் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், திவ்ய பிரபா, ராஜேஷ் மாதவன், கனி குஸ்ருதி, இயக்குநர்கள் ஜியோ பேபி, ஆஷிக் அபு, கமல் கே.எம், குஞ்சிலா மாசில்லாமணி மற்றும் பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்ட பல பிரபலமான மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் அரசியலமைப்பின் முகப்புரையின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
இவர்களுடைய பதிவு சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் ” இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை, சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக உருவாக்குவதற்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பதற்கும் உறுதியுடன் தீர்மானித்துள்ளோம். நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல்.
சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் சுதந்திரம், அந்தஸ்து மற்றும் வாய்ப்பின் சமத்துவம் மற்றும் அவர்கள் அனைவருக்கும் மத்தியில் ஊக்குவித்தல்; சகோதரத்துவம் தனி மனிதனின் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது.
நமது அரசியலமைப்புச் சபையில், 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஆறாவது நாள், இதன் மூலம் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, இயற்றி, நமக்கே வழங்குகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
பல பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு இருக்கும் நிலையில், மலையாள பிரபலங்கள் இப்படி பதிவிட்டு இருப்பது பேசும்பொருளாகியுள்ளது. இவர்களுடைய பதிவுக்கு ஒரு பக்கம் பாராட்டுகளும் ஒரு பக்கம் எதிர்ப்புகளும் குவிந்து வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.