சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது.
3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
நேற்று முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்படைந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.
முதலில் இறங்கிய ஜெய்ஸ்வால் ரோகித் ஜோடியில், கேப்டன் ரோகித் 2 ரன்னில் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட் ஆக, தொடர்ந்து சர்பராஸ் கான் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
இதையடுத்து ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஜோடி நிதானமாக விளையாடியது. இருப்பினும் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேற, பண்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்,
தொடர்ந்து கேஎல் ராகுல், ஜடேஜா,அஸ்வின் என அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர். குல்தீப் 2 ரன் எடுக்க பும்ரா 1 ரன்னில் வெளியேறினார்.
இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. குறிப்பாக 5 வீரர்கள் டக்அவுட் ஆகியுள்ளனர். சொந்த மண்ணில் இந்திய அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…
தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…
அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
This website uses cookies.