(ஆ)சாமியார்களை சந்திப்பது தனி மனித விருப்பம்.. ஆனா சுயமரியாதையை இழக்க கூடாது : பங்காரு – அமைச்சர் சந்திப்பு குறித்து திமுக எம்பி சர்ச்சை!!

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். மேல்மருவத்தூர் என்றாலே அனைவருக்கும் பரிட்சயமானது ஆதிபராசக்தி சித்த பீடம்தான்.

இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள், குறிப்பாக அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகம் உள்ளிட்டவை இயங்குகிறது.

இந்த கோவிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் என பல்வேறு அசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் வந்து செல்வது வாடிக்கையான ஒன்று.

இந்த நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைய முழு காரணமாக இருந்த பங்காரு அடிகளாரின் 81வது பிறந்தநாள் கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஆளுநர் தமிமிழசை அவர்கள், பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பிறந்தநாள் முடிந்தும் தெடர்ச்சியாக பங்காரு அடிகளாரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான கே.என் நேரு கடந்த சில நாட்களுக்கு முன் பங்காரு அடிகளாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

வாழ்த்த வந்த அமைச்சர் நேருவிற்கு சந்தன மாலை அணிவித்து பங்காரு அடிகளார் மரியாதை செலுத்தினார், மேலும் அடிகளாருடன் பேசும் போது, அடிகளார் நாற்காலியிலும், அமைச்சர் நேரு தரையில் அமர்ந்து பேசினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார், அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே… என பதிவு செய்துள்ளார்.

திமுக இயக்கத்தை காத்தவர்களை அமைச்சர் அவமதித்தாக திமுக எம்பியின் ட்விட் உள்ளது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

43 minutes ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

2 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

3 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

3 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

3 hours ago

கத்தியை காட்டி மிரட்டி 19 வயது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தந்தையின் சபல புத்தி..!!

ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…

4 hours ago

This website uses cookies.