பீஸ்ட் படம் பார்க்க சென்ற போது கார் விபத்தில் சிக்கியதில் ரசிகர் ஒருவருக்கு உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவிக்காதது வேதனையின் உச்சம் என்று தமிழக பால் முகவர்கள் சங்க தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
அஜித் உள்ளிட்ட நடிகர்களைப் போல இல்லாமல், ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பு, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை நல்வழிப்படுத்தாத நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தமிழக போலீஸூக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். இது பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு எதிராக பொன்னுசாமி மேலும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-நடிகர் விஜய் நடிப்பில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடந்த 13-ம் தேதி வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் சிறப்பு காட்சியை கோவை மாநகரில் உள்ள திரையரங்கில் காண முன்பதிவு செய்து, தனது நண்பர்களுடன் சென்ற கவுசிக் என்கிற ரசிகர் ஓட்டிச் சென்ற கார், விபத்தில் சிக்கி அவர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.
அவரோடு உடன் சென்ற நண்பர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது நடிப்பில் வெளியான திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காணச் சென்ற ரசிகரின் வாகனம் விபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததோடு உடன் சென்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகனை இழந்து தவிக்கும் ரசிகர் கவுசிக்கின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் தரப்பில் இருந்து இதுவரை ஒரு இரங்கல் செய்தியோ, ஆறுதலான வார்த்தைகளோகூட அறிக்கையாக வெளியிடப்படாதது வேதனையின் உச்சம்.
தங்களின் வாழ்வாதாரமாக திகழும் ரசிகர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை தாங்கள் நடிக்கும் படம் மூலம் கோடி, கோடியாய் பணம் வந்து கொட்டினால் மட்டும் போதும் நினைக்கும் ஒரு சில நடிகர்கள் இருப்பது திரையுலகின் சாபக்கேடு. ஒருபுறம் டாஸ்மாக் கடைகளின் வெளிச்சத்திலும், மறுபுறம் திரை வெளிச்சத்திலும் மின்மினிப் பூச்சிகளாய் தங்களின் வாழ்க்கையைத் தொலைக்கும் இளைய சமுதாயம் இனியேனும் தங்களின் பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தினரையும், நண்பர்களையும் ஒரு கனம் சிந்தித்துப் பார்த்து தங்களை திருத்திக் கொள்ள முன் வர வேண்டும். இல்லை நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் இளைய சமுதாயத்தையும், அடுத்த தலைமுறையையும் அந்த ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, எனக் குறிப்பிட்டுள்ளார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.