கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது, ராகுல் லோக்சபாவில் பேசுகையில், ராமரை அயோத்தி என்ற நகரில் அடைத்து பேசுகிறார். நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., மட்டும் ஹிந்து மதம் அல்ல எனவும், ஹிந்து மதத்தினர் எல்லோரும் வன்முறையாளர்கள் எனவும் பேசியுள்ளார். தான் பேசியது தவறு என தெரிந்தவுடன், ஹிந்து என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார்.
அமைதி, சமத்துவம் என அனைவரையும் அரவணைப்பது தான் ஹிந்து மதம் என பேசும் ராகுல், அதற்கு முன் அவர்களின் தி.மு.க., கூட்டணி கட்சியினர்களான பாலு, ராசா, உதயநிதி ஆகியோர் ஹிந்து மதம் குறித்த பேச்சுகளை கேட்க வேண்டும். தமிழக அமைச்சர் உதயநிதி ஹிந்துமதம் அதாவது சனாதன தர்மத்தை அழிப்பேன் என பேசுகிறார்.
அவர்கள் பேசியதை அறியாமல் ராகுல் லோக்சபாவில் ஹிந்து, இஸ்லாம் என மதம் குறித்து பேசுவது அழகல்ல. நாட்டில் வெறுப்பு அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கிறது என்றெல்லாம் பேசும் ராகுலுக்கு கடந்த, 2004 முதல், 2014 வரை காங்., ஆட்சியில் அதிக குண்டுவெடிப்புகள், கலவரங்கள் நடந்ததை மறுக்க முடியுமா.
கடந்த, 10 ஆண்டு, பா.ஜ.. ஆட்சியில் தான் அமைதி நிலவியது. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது பா.ஜ., அரசு மட்டுமே.
தி.மு.க., எம்.பி., ராசா பேசுகையில், மத்திய அரசை மைனாரிட்டி அரசு என பேசுகிறார். கடந்த காலத்தில் மெஜாரிட்டி இல்லாமல் தி.மு.க., ஆட்சி நடந்தபோது அவர்களை மைனாரிட்டி அரசு என மற்ற கட்சிகள் விமர்சித்ததை மறந்துவிட்டாரா.
தன் மீது தலித் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்கிறார். அவர் கிருஷ்ணகிரியில் கூட நின்றிருக்கலாம். ஆனால் நீலகிரியில் நின்றது ஏன். கண்ணியம், பண்பாடு, ஒழுக்கம் குறித்து பேச தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீசை போட முடியுமா என மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார்.
அதை தடுக்க தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்க உள்ளார்களா என தெரியவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து பேச, 4 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.