அவரு வெளிநாடு போறதால பைடனும், ட்ரம்பும் நடுங்கிப்போயுள்ளனர்.. செல்வப்பெருந்தகை கிண்டல்!!

அண்ணாமலை ஜோபைடன் ஆக போகிறார், கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் என்று ஊரில் ஒரு பழமொழி உள்ளது. அது போல அண்ணாமலை செயல் உள்ளது என காங் கமிட்டி தலைவா செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியவில்லை, வெளிநாடு சென்று என்ன செய்ய போகிறார். இவரது வருகையை நினைத்து ஜோ பைடன் என்னடா ஒரு ஆர்எஸ்எஸ் கும்பல் இங்கு வருகிறேதே என்று அதிர்ந்து போய் உள்ளார். இவரை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்று ஜோ பைடனும், டிரம்பும் ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.

நான் தமிழனாக இருந்தாலும் காவிரி பிரச்சனையில் கன்னட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நாங்க எங்காவது ஒரு இடத்தில் பேசியிருக்கிறோமா? இல்லை. ஷோபா காராத் தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைத்து சென்றார் என்றார்கள் அதையும் கண்டிக்கவில்லை. வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் அவர் எல்லா இடங்களிலும் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார்.

காங்கிரஸ் திமுகவின் அடிமை என்றார். இவர் மூன்று கட்சிகளில் இருந்து வந்தவர் காங்கிரஸ் வரலாறு தெரியாது என்றார் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உள்ளது. அதனால் நாங்கள் மிகவும் பணிவுடன் தான் அவருக்கு கூறியிருக்கிறோம் இதெல்லாம் அரசியலில் வேண்டாம் என்று. நல்ல தலைவர்கள் இருப்பதால் தான் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அவரது கருத்து சுதந்திரம் அவர் பேசலாம் அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

இந்தியர்கள் என்றால் அன்பு செலுத்துபவர்கள், எல்லா மதம், ஜாதியையும் அரவணைப்பவர்கள், வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகம் முழுவதும் இந்தியர்கள் மேல் ஒரு பெருமை இருக்கிறது. அந்த பெருமையை சீர்குலைப்பதற்காக குறுகிற கண்ணோட்டத்தில் மத அரசியலை கையில் எடுத்து செய்திருந்தார்கள் இப்போது அந்த மத அரசியல் தோல்வி அடைந்திருக்கிறது.

காலை முதல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது அண்ணாமலையுடன் சேர்ந்த சகா அவருக்கு நெருங்கியவர் 267 கிலோ தங்கத்தை கடத்தி சிக்கி இருக்கிறார். என்னிடம் ஆதாரம் உள்ளது இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்ல போகிறார். எங்களை மிரட்டுவது, வழக்கு போடுவது என்று அண்ணாமலை உள்ளார்.

நாங்கள் எதற்கு தயாராக இருக்கிறோம். எங்கள் வீடுகள் எப்போதும் திறந்தே இருக்கும், எப்போது வேண்டுமென்றாலும் வாங்க தவறு செய்திருந்தால் எடுத்து கொண்டு போங்க, கொள்ளை அடித்த பணம், ஊழல் பணம், எல்லா மாநிலங்களில் ஆளுங்கட்சியில் இருக்கிற பணம் என்று எல்லாத்தையும் எடுத்து கொண்டு போங்க. எங்களை மிரட்டுவது, வழக்கு போடுவது என்று அண்ணாமலை உள்ளார். நாங்கள் எதற்கு தயாராக இருக்கிறோம். எங்கள் வீடுகள் எப்போதும் திறந்தே இருக்கும், எப்போது வேண்டுமென்றாலும் வாங்க தவறு செய்திருந்தால் எடுத்து கொண்டு போங்க, கொள்ளை அடித்த பணம், ஊழல் பணம், எல்லா மாநிலங்களில் ஆளுங்கட்சியில் இருக்கிற பணம் என்று எல்லாத்தையும் எடுத்து கொண்டு போங்க.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

2 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

4 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

4 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

6 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

6 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

7 hours ago

This website uses cookies.