பாஜகவினரை பொறுக்கி எனக் கூறிய நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சி மக்கள் சபை எனும் விவாத நிகழ்ச்சியை வாராவாரம் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் வேளாளர் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, பேசிய நாஞ்சில் சம்பத், பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று குறிப்பிட்டு பேசினார்.
இதனால், அரங்கில் பார்வையாளர்களாக இருந்த பாஜகவினர் கோபமடைந்தனர். ஒருகட்டத்தில், அனைவரும் மொத்தமாக எழுந்து மேடையை நோக்கிச் சென்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும், நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்றும், அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், நிகழ்ச்சி நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தான் பேசியது தவறு என உணர்ந்திய நாஞ்சில் சம்பத், தான் பேசிய வார்த்தையை திரும்பப் பெறுவதாகக் கூறினார். இதனால், நிகழ்ச்சியில் மீண்டும் அமைதி திரும்பியது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.