பாஜகவினரை பொறுக்கி எனக் கூறிய நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சி மக்கள் சபை எனும் விவாத நிகழ்ச்சியை வாராவாரம் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் வேளாளர் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, பேசிய நாஞ்சில் சம்பத், பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கி என்று குறிப்பிட்டு பேசினார்.
இதனால், அரங்கில் பார்வையாளர்களாக இருந்த பாஜகவினர் கோபமடைந்தனர். ஒருகட்டத்தில், அனைவரும் மொத்தமாக எழுந்து மேடையை நோக்கிச் சென்று தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும், நாஞ்சில் சம்பத் பேசியது தவறு என்றும், அதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், நிகழ்ச்சி நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தான் பேசியது தவறு என உணர்ந்திய நாஞ்சில் சம்பத், தான் பேசிய வார்த்தையை திரும்பப் பெறுவதாகக் கூறினார். இதனால், நிகழ்ச்சியில் மீண்டும் அமைதி திரும்பியது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.