குமரி: குழித்துறை நகராட்சியில் 16வது வார்டு மக்கள் குடிநீருக்கு சிரமபட்டதால் கவுன்சிலர் மண்வெட்டியுடன் தானே முன்வந்து களத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க குழி தோண்டும் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் 16வது வார்டு பகுதியில் குழிதோண்டும் போது வீடுகள் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது.
தொடர் விடுமுறை என்பதால் பழுதை சீரமைக்காததால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். விடுமுறை என்பதால் அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டோருக்கு தண்ணீரே கிடைக்காததால் அவதி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து வார்டு பாஜக கவுன்சிலரான ரத்தினமணி ஒப்பந்தகாரர் மற்றும், குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தானே பிளம்மர் உதவியுடன் மண் வெட்டியுடன் களத்தில் இறங்கி பழுதடைந்த உடைப்பை சரி செய்த பின்னர் ஒப்பந்த காரர்கள் ஏற்படுத்திய சேதத்தை சரி செய்து குழிகளை மூடியுள்ளார்.
இதை அந்த பகுதி மக்கள் பாராட்டியதோடு அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.