அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு அமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் கூறியதாவது :- கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி சமரசம் ஏற்பட்டதாக வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இன்று இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கில் போதிய முகாந்திரம் இருக்கிறது. எனவே மீண்டும் உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே தற்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை உடனடியாக பதவி விலக வேண்டும்.
3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் உடனடியாக பதவி விலகவில்லை என்றால் வரும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் நடத்தப்படும், என தெரிவித்தார்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
This website uses cookies.