சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்சி அணித்தலைவர் பாலச்சந்தர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று இரவு நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் வைத்து பாலச்சந்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக நிர்வாகி கொலைக்கு அண்ணாமலை கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். திமுக அரசால் தமிழகத்தில் யாரும் பாதுகாப்பு இல்லை என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இங்கே எவருக்கும் பாதுகாப்பு இல்லை! திமுக அரசால் செயல் இழந்து நிற்கும் காவல்துறையால் சாமானிய மக்களுக்கு எந்தவித நன்மையும் விளையாத சூழல். மத்திய சென்னை மாவட்ட பட்டியல் இன அணித் தலைவர் சகோதரர் பாலசந்தர் அவர்களின் குடும்பத்தாருக்குப் @BJP4TamilNadu கட்சி அரணாக இருக்கும்.
இளமையும், துடிப்பும் மிக்க எங்கள் சகோதரனைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை காவல்துறை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.