டிரெண்டிங்

சிதம்பரம் கோவிலை கைப்பற்ற நினைத்தால் மிகப்பெரிய போராட்டம் : ஹெச் ராஜா எச்சரிக்கை!!

விழுப்புரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக எச்.ராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஹரியானா, ஜம்முகாஷ்மீர் மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்து சமுதாயத்தை சாதியை சொல்லி பிரித்து சிறுபான்மையினரை மதத்தின் பெயரால் இணைத்து நாட்டை சிதைத்துவிட வேண்டுமென மனப்பால் குடித்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.
ஹரியானாவில் கடந்த 2019-ல் பா.ஜனதா 40 சீட்டுகள் பெரும்பான்மையாக வெற்றி பெற்று சவுத்தாலா கட்சியுடன் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த நிலையில் இந்த முறை அரிது பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 2019-ல் பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் 36 சதவீதமாக இருந்தது.

இம்முறை 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 29 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் வாக்கு சதவீதத்தில் முதல் இடத்தில் பா.ஜனதா இருக்கிறது.

370 சட்டத்தை ரத்து செய்ததை மக்கள் ஏற்கவில்லை என காங்கிரஸ், இந்தியா கூட்டணி கட்சிகள் கூறுவது உண்மைக்கு புறம்பானது. மக்கள் அமைதியை விரும்புகின்றனர். எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வெளியே உள்ள அந்த மைதானத்தில் வருடா வருடம் கும்மியாட்டம், கோலாட்டம், கரகாட்டம் எல்லாம் நடத்துவது வழக்கம்.

அங்குள்ள பொது தீட்சிதர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென இதுபோன்று அங்கு நடந்ததை தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய தீய விரோத சக்திகள் தவறாக தெரிவித்திருக்கிறார்கள்.

பொது தீட்சிதர்கள், 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்றதாக கூறுகின்றனர். இந்த நிலம் அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு தாசில்தாரிடம் உள்ளது. 3,347 ஏக்கர் நிலமும் சிறப்பு தாசில்தாரிடம் உள்ள நிலையில் பொது தீட்சிதர்கள் எப்படி விற்க முடியும்.
கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய தடை எனக்கூறுகின்றனர். இது இந்து சமய அறநிலையத்துறையின் விஷமத்தனமான செயல்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.

இந்து விரோத தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், நடராஜர் கோவிலுக்கு எதிராக புரளியை பரப்புகின்றனர். இதனை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.

2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய பொது தீட்சிதர்களுக்கு உரிமை அளித்துள்ளது. இதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது, அவர்களுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எப்படியாவது ஏதாவது சொல்லி கோவிலை அபகரிக்க பார்க்கிறார்கள்.

அரசு, நடராஜர் கோவிலை அபகரிக்க திட்டம் தீட்டுகிறது. நடராஜர் கோவிலில் தரிசன கட்டணம் கிடையாது, அபிஷேக கட்டணம் கிடையாது. உண்டியல் கிடையாது.

அரசு தனி தாசில்தாரிடம் உள்ள நிலங்களை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத, தரிசன கட்டணம் இல்லாத கோவில் நடராஜர் கோவில். இப்படிப்பட்ட இந்த கோவிலை அபகரிக்க நினைத்தால் இந்துக்கள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியது வரும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

22 minutes ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

50 minutes ago

இளைஞருக்கு இப்படி ஒரு சாவா? தூங்க சென்றவருக்கு 10 கடி… நடுங்க வைத்த ஷாக் சம்பவம்!

இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…

1 hour ago

போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…

2 hours ago

CM குடும்பத்திற்கு சிறந்த கொத்தடிமை யார்? கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம் : அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…

2 hours ago

விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்

விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…

3 hours ago

This website uses cookies.