சென்னை : தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர்கேட்டிருக்கிறது எனவும், இந்தியாவிலேயே கல்வி அடிப்படையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை 27வது இடத்தில் உள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில கல்வியாளர் பிரிவின் மாநில செயற்குழுகூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில கல்வியாளர் பிரிவின் தலைவர் தங்க கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் கூறியதாவது:- பாஜகவின் உடைய முக்கிய பிரிவான கல்வியாளர் பிரிவில் மாநில செயற்குழு பயிற்சி முகாம் தற்போது நடைபெற்று இருக்கிறது இதில் சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தும் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே இருந்தது. ஆனால் தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய மோசடி.
உரிமத்தை புதுப்பிக்கும் தவணையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை என்பதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை என மாற்ற வேண்டியது அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை நடத்துனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என கூறுவது பள்ளியை நடத்துகிறவர்களைய வஞ்சிக்க கூடிய செயலாக உள்ளதாகவும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உரிமையாளர்களின் நலன் கருதி அவர்களது கல்வி சேவைக்கு வடையூரு செய்யாமல் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
அரசு அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றுகிற கௌரவ பேராசிரியர்களை ஆட்சிக்கு வந்தால் நிரந்தரமாக பணிய அமர்த்துவோம் என கூறிவிட்டு தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை. இவர்களை நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் அதேபோல பகுதி நேர விரிவுரையாளர்களும் தொழில்நுட்ப ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.
எஸ்சி எஸ்டி மாணவ மாணவிகளுக்கு பயன் தரக்கூடிய நவோதயா பள்ளியை திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்ததோடு மேலும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டிற்கும் தமிழக மாணவர்களுக்கும் நன்மை பயக்கும் என கூறினார். பாஜக நாகை மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது அப்பகுதி காவலாளர்கள் பொய் வழக்கு போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர்கேட்டிருக்கிறது எனவும் இந்தியாவிலேயே கல்வி அடிப்படையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை 27-வது இடத்தில் உள்ளதாகவும் கூறிய அவர் பள்ளி கல்வித்துறையினுடைய உள்கட்டமைப்புக்கு எத்தனை கோடி ரூபாய் என்றாலும் மத்திய அரசாங்கம் செலவிட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி தொடர்பாக மேலும் ஒருவர் உயிரிழந்தது குறித்ததான கேள்விக்கு, ஆன்லைன் தம்மியை தடை செய்ய வேண்டும் என்று முதல் அறிக்கையை தமிழகத்தில் கொடுத்தது பாஜக தலைவர் அண்ணாமலை தான் எனவும் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் கவர்னர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பரிசீலனை செய்து சட்ட விதிகளை ஆராய்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளதாக கூறினார்.
மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கைக்கு தமிழக அரசு எந்தவித பதிலும் கூறவில்லை எனவும் தமிழக அரசு இதற்கு கண்டிப்பாக பதில் கூற வேண்டும் எனவும் கூறினார்.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.