சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் இந்தியக் கொடியை அனுமதித்த விவகாரத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, 11 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி சென்னைக்கு வந்துள்ளது. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் கருப்பு உடை அணிந்து வரவும், இந்தியக் கொடியை எடுத்துச் செல்ல ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசியக் கொடியுடன் வந்த சில ரசிகர்களிடம் இருந்து போலீசார் தேசிய கொடியை காவல் ஆய்வாளர் பறிமுதல் செய்தார். பின்னர், அந்தக் கொடியை குப்பைத் தொட்டியில் போட முயன்றார். இதனால், அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் தேசியக்கொடியை அனுமதி மறுத்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பியதை அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பாகிஸ்தானில் நமது வீரர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களை அவர் மறந்துவிட்டார்.
திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவருமான அசோக் சிகாமணி அரசியல் பிரசாரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று இன்று நமது தேசத்தின் கொடியை அவமதித்துள்ளார். சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்தியக் கொடியை ஏந்தியபடி சென்ற ரசிகர்களை மைதானத்திற்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த உரிமையை யார் கொடுத்தது?
நமது தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மாநில மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், மூவர்ண கொடியின் புனிதத்தை இழிவுபடுத்தும் இந்த ஊழல் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியிருக்கும், என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.