வழக்குப்பதிவு செய்தால் அஞ்சி விட மாட்டோம் என்று தமிழக அரசின் நடவடிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழக பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டானர்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 3,500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அண்ணாமலை பேசுகையில், “வழக்குப்பதிவு செய்ததால் யாரும் பயந்து விட மாட்டோம். இது என்மீது பதியப்பட்ட 84வது வழக்கு. ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட குறித்து சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லையெனில், வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,” என தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.