சென்னையில் மாமூல் தர மறுத்த ஓட்டல் மேலாளரை ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிய ரவுடி கும்பல் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை – திருமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் புகுந்த ரவுடி கும்பல் மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஓட்டல் மேலாளர் மாமூல் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கடுப்பான அந்த கும்பல், மேலாளரின் அறைக்குள் புகுந்து அவரை ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியுள்ளனர்.
வடமாநில ஊழியரான அவர் வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, போதைப் பொருட்கள் மற்றும் மதுவினால் பெட்ரோல் குண்டுவீச்சு, இரவு, பகலில் கொலை சம்பவங்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மற்றும் குண்டர் சட்டம் போடுவது தான் ஊழல் திமுக அரசின் சாதனையாகும்.
தற்போது, திருமங்கலம் பகுதியில் ஓட்டல் மேலாளரை மாமூல் கேட்டு ரவுடி கும்பல் தாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மக்களை பாதுகாப்பில்லாத வாழ்க்கை முறையில் வாழவைப்பதுதான் திமுக அரசின் எண்ணமாக இருக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.