மத்திய இணையமைச்சர் எல்.முருகனை இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையின் இன்றைய விவாதத்தின் போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறினார். மேலும், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுவதாகக் கூறிய அவர், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிவாரண நிதியை வழங்க வழிவகை செய்யும் விதமாக, புதிய விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பேசியதாவது :- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் சென்னைக்கு மட்டும் தமிழக அரசு ரூ.500 கோடி வழங்கி இருப்பதாகவும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசின் குழுவுக்கு முன்பாக மத்திய அரசின் குழு ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தை தொடர்ந்து திமுகவின் மற்றொரு எம்பியான டி.ஆர் பாலு பேசினார். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் தன் விளக்கத்தை கொடுக்க முயன்றார்.
பேரிடர் குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான கணிப்பை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியதுடன், மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் எல்.முருகன் ஆகியோர் எம்பியாக இருக்கவே தகுதி இல்லை என்றும், மத்திய அமைச்சராகவும் இருக்க தகுதி இல்லை என்றும், அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.
டிஆர் பாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் திமுக, பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், திமுக எம்பி டிஆர் பேசிய பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் குறித்து அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே, தமிழகத்திற்கான வெள்ளநிவாரண நிதியை விடுவிக்காததைக் கண்டித்து திமுக எம்பிக்களை வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், பட்டியலின அமைச்சரை தகுதியில்லாதவர் எனன் கூறிய திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “எல்முருகன் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என திமுக எம்பி டிஆர் பாலு கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரை பற்றி டிஆர் பாலு இழிவாக கூறுவது இது முதல்முறையல்ல. தன்னலமற்ற முறையில் மக்கள் பணியாற்றி வரும் எல்.முருகனின் அர்ப்பணிப்பு திமுக எம்பிக்களை எரிச்சலையடைய வைத்துள்ளது. டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் “தகுதியற்றவர்” என்று சொல்ல முடியும். பட்டியலின சமூகத்தை தகுதியற்றவர் எனக் கூறிய திமுக எம்பி டிஆர் பாலு தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.