கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியின் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிட்டுள்ளார். கோவையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, 40 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், பிரச்சாரத்தின் போது அண்ணாமலையை பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்போது, தட்டுக்கு அடியில் பணத்தை வைத்து அண்ணாமலை கொடுப்பது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாத நிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார், இது தொடர்பாக பதிலளித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை குறிப்பிட்ட தேர்தல் அதிகாரி கிராந்திகுமார், இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை அண்ணாமலை பணம் கொடுத்தது உறுதியானால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை என்றும், தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.