கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியின் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிட்டுள்ளார். கோவையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, 40 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், பிரச்சாரத்தின் போது அண்ணாமலையை பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்போது, தட்டுக்கு அடியில் பணத்தை வைத்து அண்ணாமலை கொடுப்பது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாத நிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார், இது தொடர்பாக பதிலளித்துள்ளார்.
சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை குறிப்பிட்ட தேர்தல் அதிகாரி கிராந்திகுமார், இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை அண்ணாமலை பணம் கொடுத்தது உறுதியானால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை என்றும், தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.