பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டு சென்றார்.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு முதல் முறையாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்தப் பயணமானது அரசியல் ரீதியானது அல்ல என்றும், தனது கல்விக்காக வந்திருப்பதாக அண்ணாமலை தெளிவுபடுத்தியிருந்தார். அமெரிக்காவில் 2 வாரம் தங்கியிருந்து தனது கல்விக்கான வேலைகளை செய்து முடித்தார்.
பின்னர், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அங்கு உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசின் நிதியுடன் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், லண்டனில் நடக்கும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். அவரை பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தனர். இந்தப் பயணத்தின்போது லண்டனில் உள்ள தமிழ்ச் சங்க பிரதிநிதிகளையும் அண்ணாமலை சந்தித்துப் பேசவுள்ளார்.
இதனிடையே, ஆருத்ரா மோசடி வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அண்ணாமலையின் லண்டன் பயணம் கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.