ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தினரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அமைச்சர் உதயநிதி குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ பாஜக வெளியிட்ட DMK Files காணொளிக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்காமல் திமுக அரசு மவுனமாக இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
பாஜக சொல்லியதை போல கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்பதை என்ஐஏவின் குற்றப்பத்திரிகை உறுதி செய்துள்ளது. இன்று வரை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது திமுக ; திமுகவினரின் ஆட்சி அதிகார மமதையால் மக்கள் நாள்தோறும் அவதி.
ஒருபுறம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மறுபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி முறைகேடாக சம்பாதித்திருப்பது என மக்கள் விரோத செயல்களை இனி அனுமதிக்க முடியாது. ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தினரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதிலளிப்பதோடு, தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.