பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிரபல ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை வழங்குகின்றன. இதனால் மெட்ரோல் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதோட இலவச பேருந்து பயண திட்டத்தால் போக்குவரத்து அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- தி.மு.க அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை விலைகொடுத்து பெற்றாக வேண்டியுள்ளது. உலகில் எந்த மூலையிலும் இதுபோன்று நடந்ததில்லை. பயனாளிகளை ஒவ்வொரு அமைச்சரும் ஓசி என இழிவுபடுத்துவது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான்.
மேலும் படிக்க: திமுகவின் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்!
அரசின் சேமிப்பில் இருந்து மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவது என்பது சிறந்த நகைச்சுவையாகும். பால், மின்சாரக் கட்டணம் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒருநபரின் வலது பாக்கெட்டில் திருடி, இடது பாக்கெட்டுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் கொடுப்பதில் திமுகவுக்கு கை வந்த கலை.
2) திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் 6000 பேருந்துகளின் சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டது. இது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
3) கடந்த 3 ஆண்டுகளாக மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யும் திட்டம் அறிவிப்பாகவே உள்ளது.
திமுக அரசின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நிதி இலாகாவை இழந்த அமைச்சர், தனக்கு சம்பந்தமே இல்லாத துறை குறித்து பேசி வருகிறார். அப்படியெனில், அரசுப் பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை, கேரள அரசுக்கு சொந்தமான தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வழங்கியது ஏன்..?
நமது மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்ட இந்த ₹1000 கோடி டெண்டரில் ELCOTக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன்..? என்று தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.