இனி ஒரு உயிர் போனாலும்…. எந்தக் காலத்திலும் மன்னிப்பே கிடையாது ; திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை…!!

சென்னை ; இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனால், திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆம்‌ தேதி, மழை வெள்ளம்‌ சூழ்ந்திருந்ததால்‌, பிரசவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸோ, மற்ற வாகனங்களோ கிடைக்காமல்‌, வடசென்னை கன்னிகாபுரம்‌ பகுதியைச்‌ சேர்ந்த மசூத்‌ – செளமியா தம்பதியினரின்‌ குழுந்தை, மருத்துவமனைக்கு மீன்பாடி வண்டியில்‌ கொண்டு செல்லும்‌ வழியிலேயே இறந்த நிலையில்‌ பிறந்திருக்கிறது.

இந்நிலையில்‌, குழந்தையின்‌ தாய்‌ உயிரையாவது காப்பாற்ற, புளியந்தோப்பு அரசு மருத்துவனைக்குக்‌ கொண்டு சென்ற போது, அரசு மருத்துவமனையின்‌ கதவுகளைத்‌ திறக்க மறுத்திருக்கிறார்கள்‌ என்று கூறப்படுகிறது. பின்னர்‌ தனியார்‌
மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, தொப்புள்கொடி அறுக்கப்பட்ட, பின்னர்‌ கீழ்ப்பாக்கம்‌ மருத்துவமனைக்குக்‌ கொண்டு சென்றிருக்கிறார்கள்‌.

குறித்த நேரத்தில்‌ மருத்துவ உதவி கிடைக்காமல்‌, பச்சிளம்‌ குழந்தையின்‌ உயிர்‌ பறிபோனது மட்டுமல்லாமல்‌, தாயின்‌ உயிருக்கும்‌ ஆபத்து ஏற்படும்‌ விதமாக அரசு மருத்துவமனையில்‌ நடந்து கொண்டிருக்கிறார்கள்‌. மேலும்‌, கீழ்ப்பாக்கம்‌ அரசு மருத்துவமனையில்‌, குழந்தையின்‌ உடலைக்‌ கொடுக்க, பணம்‌ கேட்டதாகவும்‌ குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உச்சகட்ட அவலமாக, குழந்தையின்‌ உடலை, துணியில்‌ சுற்றிக்‌ கொடுக்காமல்‌, சாதாரண அட்டைப்பெட்டியில்‌ வைத்துக்‌ கொடுத்திருக்கிறார்கள்‌. தமிழக மருத்துவத்‌ துறை வரலாற்றில்‌ இந்த சம்பவம்‌ மிகப்பெரும்‌ கருப்புப்‌ புள்ளி.

நமது நாட்டைப்‌ பொறுத்தவரை மருத்துவத்‌ துறையின்‌ தலைநகரமாக விளங்கிய தமிழகம்‌, கடந்த சில ஆண்டுகளாகவே, சொல்லொணா அவல நிலைக்குச்‌ சன்று கொண்டிருப்பதைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கிறோம்‌. கடந்த 2022 ஆண்டு நவம்பரில்‌, பொரியார்‌ நகர்‌ அரசு மருத்துவமனையில்‌ தவறான சிகிச்சை காரணமாக, கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்தார்‌. கடந்த மார்ச்‌ மாதம்‌ வரை, 21 மாதங்களில்‌ 247 குழந்தைகள்‌ புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில்‌ மரணமடைந்துள்ள
அதிர்ச்சி செய்தி கிடைத்தது.

கடந்த ஜுலை மாதம்‌, தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌, அங்கன்வாடியில்‌ தடுப்பூசி போடப்பட்ட பத்து மாத பெண்‌ குழுந்தை மயக்கமடைந்து, உடனடி சிகிச்சை அளிக்காமல்‌ தஞ்சாவூர்‌ அரசு மருத்துவமனைக்குக்‌ கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்த சம்பவம்‌ வரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆகஸ்ட்‌ மாதம்‌, எழும்பூர்‌ அரசு குழந்தைகள்‌ மருத்துவமனையில்‌ ஐந்து ஆண்டுகளாக தவறான சிகிச்சை காரணமாக, காவலர்‌ ஒருவரின்‌ 10 வயது பெண்‌ குழந்தையின்‌ வலது கால்‌ பாதிப்படைந்ததால்‌, அவர்‌ தன்னையும்,‌ குழுந்தையையும்‌ கருணைக்‌ கொலை செய்யும்படி வேதனை தெரிவித்திருந்தார்‌. அதே ஆகஸ்ட்‌ மாதம்‌, சென்னை ராஜீவ்‌ காந்தி மருத்துவமனையில்‌ தவறான சிசிச்சை காரணமாக, ஒன்றரை வயது ஆண்‌ குழுந்தையின்‌ வலது கை அழுகி அகற்றப்பட்டதோடு, சிகிச்சை பலனின்றி, அந்தக்‌ குழுந்தை பலியான துயரமும்‌ நடந்தது.

கடந்த செப்டம்பர்‌ மாதம்‌, சென்னை ராஜீவ்‌ காந்தி மருத்துவமனையில்‌, ஆஞ்சியோ சிகிச்சை பெற வந்த பெண்ணின்‌ கையை, தவறான சிகிச்சை காரணமாக அகற்றியுள்ளனர்‌. அரசு மருத்துவமனைகளில்‌ தொடரும்‌ இது போன்ற தவறான சிகிச்சைகள்‌ காரணமாக உயிரிழப்புகள் ஆகியிருக்கின்றன. எளிய மக்களின்‌ ஒரே நம்பிக்கையான அரசு மருத்துவமனைகள்‌, இது போன்று உயிர்களைப்‌ பறிக்கும்‌ இடங்களாக மாறி வருவதைக்‌ குறித்து பொதுமக்களும்‌, தமிழக பாஜகவும்‌ பல முறை கேள்வி எழுப்பியும்‌, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும்‌ எடுக்காமல்‌, மடைமாற்றுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவுக்கு இணையான மருத்துவக்‌ கட்டமைப்பு என்று முதலமைச்சர்‌ ஒருபுறம்‌ கூறுவதும்‌, அரசு மருத்துவமனைகளில்‌ ஏற்படும்‌ தொடர்‌ மரணங்களுக்கு தங்கள்‌ மீது எந்தத்‌ தவறும் இல்லை என்று, பிறரைக்‌ கைகாட்டி அமைச்சர்‌ தப்பிக்க முயற்சிப்பதும்‌ எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பதை திமுக அரசு உணர வேண்டும்‌.

அரசு மருத்துவமனைகளில்‌, மருத்துவர்களுக்கும்‌, மருத்துவமனை பணியாளர்களுக்கும்‌ பற்றாக்குறை உள்ளதா, அதன்‌ காரணமாக குறித்த நேரத்தில்‌ சிகிச்சை பெற முடியாமல்‌ பொதுமக்கள்‌ அவதிக்குள்ளாகின்றனரா என்பதைக்‌ கண்டறிந்து, உடனடியாக அதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்க வேண்டியது அரசின்‌ கடமை.

ஏழை எளிய மக்களின்‌ அடைக்கலமான அரசு மருத்துவமனைகளில்‌, தரமான உட்கட்டமைப்பு வசதிகள்‌ உள்ளனவா என்பதை தமிழக அரசு இலவசமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவ வசதிகளுக்கு, கட்டணம்‌ வசூலிப்பவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌. தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளிகளில்‌ அரசு மருத்துவமனைகளில்‌ ஆய்வுகள்‌ நடத்தி, அடிப்படை வசதிகளைத்‌ தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்‌.

இன்னும்‌ எத்தனை ஏழை எளிய உயிர்களைப்‌ பலியாடக்‌ காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள்‌ எவற்றையும்‌ மேம்படுத்தாமல்‌, விளம்பரத்துக்காகவும்‌, இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும்‌, இழப்பீடு மட்டும்‌ கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப்‌ போடுவதால்‌ என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும்‌ அரசின்‌ அலட்சியத்தால்‌ ஒரு உயிர்‌ பறிபோனால்‌, திமுகவுக்கு எந்தக்‌ காலத்திலும்‌ மன்னிப்பு கிடையாது, என தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

26 minutes ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

53 minutes ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

2 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

2 hours ago

மரண மாஸ்.!மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினிகாந்த்.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…

3 hours ago

விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?

தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…

3 hours ago

This website uses cookies.