2ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிகத்தை ஆளும் திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார். இந்த சூழலில் ஏற்கனவே திமுக பைல்ஸ் என்று திமுக ஊழல் பட்டியலை இரு கட்டங்களாக வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கடந்த பொங்கலன்று முன்னாள் உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுடன் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, ஆ.ராசா மற்றும் முன்னாள் தலைமை செயலர் சண்முகநாதன் உள்பட பலரின் ஆடியோக்கள் எனக் கூறி, அடுத்தடுத்து வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை.
தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், DMK FILES PART-3 என்ற பெயரில் 2ஜி ஊழல் தொடர்பான 4வது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அந்த ஆடியோவில் 2ஜி விசாரணைக்கு மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்பே, திமுக எம்பி ஆ.ராசாவுக்கு தகவல் வந்துள்ளதை, தமிழக உளவுத்துறை முன்னாள் உயரதிகாரி ஜாபர் சேட்டுடன் அவர் பேசும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் திமுக எம்பி கேசி பழனிசாமி மற்றும் ஆ.ராசாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா கூறுகிறார். தற்போது, இந்த ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில்…
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
This website uses cookies.