துணை முதல்வர் விவகாரம்… ஆரம்பித்ததே திமுக தான்… இந்த நாடகம் இங்க வேணாம் ; CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளுநரை முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை – திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் சுவாமி திருக்கோவிலில் பாஜக சார்பில் கோவில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கோயிலை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். கோயில் பரிகாரம் சுற்றி உள்ள இடங்களை தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தார்.

கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- அடுத்த 4 நாட்களுக்கு கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட 5000 மத வழிபாட்டு தலங்களில் பாஜக சார்பில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ குமரகுரு தாசர் சுவாமி திருக்கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டோம்.

பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீடு இந்த பகுதியில் தான் உள்ளது. ஒரு பெண் என்னை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையால் தான் வேலைக்கு வந்து இருக்கிறார். இதற்குப் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன சமூக நீதி.

நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பாஜக களத்தில் இறங்கி போராடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆளுநரை திட்ட வேண்டும் என்று படத்தில் வருவது போல் திமுக திட்டம் வைத்துள்ளது. எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் இதுதான் நடக்கும் என்பது போல, சேலம் துணைவேந்தருக்கு திமுக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது போல் இருக்கிறது.

ஆளுநரை பயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் துணைவேந்தரை கைது செய்து காவல்துறையை ஏவி இருக்கிறார் முதல்வர். மலிவு அரசியல் செய்வது முதல்வரா..? ஆளுநரா..? என முதல்வர் கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

முதல்வர் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் ஆளுநரை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார் என்பது எங்கள் பார்வை. பிரதமருடனான பாஜகவினர் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை. கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என மக்கள் நினைப்பதே முதல் வெற்றி, என தெரிவித்தார்.

பிரதமர் மோடி வருகை எதிர்ப்பு தெரிவித்த கருப்பு பலூன்கள் பறக்க விடுவோம் என எனக்கு காங்கிரஸார் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “சில பேர் அட்டேன்சன் சீக்கர் (விளம்பர பிரியர்கள்). காங்கிரஸில் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் இல்லை,” என்றார்.

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் குறித்து செய்தியாளர் எழுதிய கேள்விக்கு, “பார்த்து பக்குவமாக பல்லு பட்ற போகுது” என்பது போல் ஃப்ரெண்ட்லி கொஸ்டின்ஸ் கேட்டிருக்கிறார் நெறியாளர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் என ஆரம்பித்ததே திமுகவினர்கள் தான்.

38 கேள்விகள் அந்த நேர்காணலில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், முக்கியமான கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை. அவர் அளித்த பேட்டியைப் பற்றி பேசி பாஜக தரம் தாழ்த்த விரும்பவில்லை. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல திமுக ஆட்சிக்கு வந்ததுடன் பல கோவில்களை இடித்தனர். இஸ்லாமியர் உட்பட அடங்கி ஐந்து நீதிமன்ற அமர்வில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இரு சமூகத்தினருக்கும் நீதி வழங்கப்பட்டு மக்களின் பணத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது.

நானும் எனக்கு முன்பிருந்த தலைவர்களும் பாஜக வளர்ச்சிக்காக நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம், என கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

28 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

32 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

58 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.