எந்தக் கட்சி இருக்கும், எது காணாமல் போகும் என்பது ஜூன் 4ம் தேதிக்கு பின் தெரியும் என்றும், விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாக இருப்பது வாடிக்கைதான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கானாடுகாத்தான் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது :- ஏற்கனவே திருமயத்திற்கு சாமி கும்பிட வருவதாக அளித்த உத்திரவாதத்தை நிறைவேற்றவே அமித் ஷா தமிழகம் வந்தார். நாடாளுமன்ற தேர்தல் துவக்கத்தின் போதும் தேர்தல் இறுதி பரப்புரையின் நிறைவு செய்யும் போதும் மோடி மற்றும் அமித்ஷா வந்தது தமிழகத்தின் மீது அவர்கள் காட்டும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.
மேலும் படிக்க: ஆட்டுப்பட்டியில் ஒரு ஜம்ப்… ஆட்டின் கழுத்தை பிடித்து குதறிய சிறுத்தை.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திராவிற்கு சொந்தமான விவேகானந்தா பாறைக்கு தியானம் செய்யத்தான் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இது அவரது தனிப்பட்ட நிகழ்ச்சி. இந்துத்துவா என்பது எந்த மதத்திற்கும் எதிரி கிடையாது. இந்துத்துவாவை பற்றி மக்கள் மன்றத்தில் விவாதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜூன் 4 தேர்தல் முடிவுக்குப் பிறகு எந்த கட்சி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாக இருப்பது போல் ஜெயக்குமார் பேசி வருகிறார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்து உள்ளோம். முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம், என தெரிவித்தார்.
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
This website uses cookies.