சென்னை : ஆவின் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் மனோதங்கராஜுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தும் ஆவின் நிர்வாகத்தின் முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பாலில் 40% பங்குள்ள 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது பொதுமக்களை ஏமாற்றும் செயல் எனக் கூறி ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டிற்கு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்ட பதிவில், ஆவின் பால் பிரத்யேக பாக்கெட்டுகளில் தான் இருக்கும். ஆனால், அறிக்கையில் பெட் கலனில் பால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அண்ணாமலையின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலுக்காகவும், வெளி மாநில நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆதாயத்திற்காகவும், அண்ணாமலை இவ்வாறு செய்வதாக கருதுகிறோம் என்றும், தரமான ஆவின் பால் விநியோகத்தில் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் வருந்தத்தக்க நிலையை மறைக்கும் விதமாக அமைச்சர் மனோதங்கராஜ் பதிலளித்திருக்கிறார். ஊழல் திமுக அரசு பால் கூட்டுறவு சங்கத்தை குறைவான விநியோகம், அதிக கட்டணம் வசூலிக்கும் பிரிவாக மாற்றியது குறித்த உண்மை நிலையைத் தான் இந்த அறிக்கை வெளிக்காட்டுகிறது. பொதுவாக பரிசோதனைக்கு கொடுக்கப்படும் பால், பெட் பாட்டில்களில்தான் வழங்கப்படும்.
நீங்களும் சரி, இதற்கு முந்தைய ஆட்சியிலும் சரி, ஆவின் கொள்முதலை குறைத்து, விலையை மட்டுமே அதிகரித்து ஆவின் நிர்வாகத்தை வீழ்ச்சியடையச் செய்து விட்டீர்கள். உங்களின் இந்த வீண் வாதம் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டில் கொழுப்பு சதவீதத்தை உயர்த்தாது, என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.