அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொன்முடி அமைச்சராக இருந்த போது, செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்தது மூலமாக அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் மீதும் வழக்குப்பதியப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தங்கம் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், அனுமதியை மீறி 2,64,644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று அவரது கோரிக்கையை மறுத்து விட்டார்.
மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்படி இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி அமைச்சரது மகனின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, 2006-11ல் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசுக்கு ரூ.28.4 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அவரை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாறாக, செந்தில் பாலாஜியை கோபாலபுரத்து குடும்பம் காப்பாற்றுவதைப் போல, அமைச்சர் பொன்முடியையும் காப்பாற்றப்படுவாரா..?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.