அரைவேக்காடுத்தனமாக யாரை காப்பாற்ற முன்னாள் முதலமைச்சர் அறிக்கை விடுகிறாரா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் சரித்திர புத்தகத்தை சரியாக படிக்க வேண்டும். முதலமைச்சர் என் மீது கிரிமினல் அவதூறு வழக்கு போட்டு உள்ளார். போதை வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்பு பற்றி திமுக விளக்கம் அளிக்க வேண்டும். என் மீது வன்மத்தை தீர்த்து கொள்வது பதில் அல்ல. மக்கள் பதில் கேட்டால் சொல்லாமல் இருப்பதால் மக்களுக்கு முதலமைச்சர் மீது சந்தேகம் அதிகமாகிறது.
சென்னையில் உள்ள குடோனில் நடத்திய சோதனைகளில் லேப்பாக இருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. எங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்து கொண்டு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் எங்கள் அப்பன் குதிர்க்குள் இல்லை என்பது போல் என் மீது வழக்கு தொடர்ந்து நான் தப்பு எதுவும் செய்ய வில்லை என்று சொல்வது போல் உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எதுவும் தெரியாமல் பேசுவது ஆச்சரியம் மட்டுமல்ல வருத்தம். நாகலாந்து, ஹிமாச்சல் பிரதேசம், குஜ்ராத் போன்ற பகுதிகளில் முந்தரா துறைமுகத்தில் பிடித்து இருப்பதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது.
தமிழ்நாட்டில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதை தான் குற்றம்சாட்டுகிறோம். பங்காளி கட்சி என்பதை முன்னாள் முதலமைச்சர் உர்ஜிதம் செய்கிறார். போதை பொருட்களை மத்திய அரசின் துறைகள் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது. முன்னாள் முதலமைச்சர் யாரை காப்பாற்ற அறிக்கை விடுகிறார், எனக் கூறினார்.
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
This website uses cookies.