சேலம் இளைஞரணி மாநாடு போடாதே என்று இயற்கை இதுவரை 4 முறை தள்ளி வைத்திருப்பதாகவும், உதயநிதி துணை முதல்வராக்க நினைக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, தளி தொகுதிகளில் என் மண், என் மக்கள் என்கிற யாத்திரையை முடித்துக்கொண்டு மாவட்டத்தின் கடைசி மற்றும் 150வது தொகுதியாக ஒசூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தினார். 150வது தொகுதி என்பதால் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி பங்கேற்றார்.
ஓசூரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்த வாகனத்தில் ரவி, அண்ணாமலை ஆகியோர் வருகை தந்தனர். பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :- சேலத்தில் மாநாட்டை போடாதே என இதுவரை இயற்கை 4 முறை தள்ளிப்போட்டிருக்கிறது. இது இயற்கை கொடுக்கும் செய்தி. திமுகவை பொறுத்தவரை ஒரு நிமிடத்தில் முடிவு, இரண்டு நிமிடத்தில் அறிவிப்பு, மூன்றாவது நிமிடத்தில் தொண்டர்கள் ஏற்பார்கள். இதுதான் குடும்ப கட்சி, குடும்ப ஆட்சி.
திருச்சியில் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டுமென திமுகவினர் எதிர்பார்த்திருக்கிறார்கள். 2024 தேர்தலுக்கு பிறகு வயதானவர்கள் கட்சியில் எதற்கு என உதயநிதியை முதல்வராக்க ஒரு கூட்டம் சுத்திக்கொண்டிருக்கிறது, என விமர்சித்தார்.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.