சேலம் இளைஞரணி மாநாடு போடாதே என்று இயற்கை இதுவரை 4 முறை தள்ளி வைத்திருப்பதாகவும், உதயநிதி துணை முதல்வராக்க நினைக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, தளி தொகுதிகளில் என் மண், என் மக்கள் என்கிற யாத்திரையை முடித்துக்கொண்டு மாவட்டத்தின் கடைசி மற்றும் 150வது தொகுதியாக ஒசூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தினார். 150வது தொகுதி என்பதால் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி பங்கேற்றார்.
ஓசூரின் முக்கிய வீதிகள் வழியாக திறந்த வாகனத்தில் ரவி, அண்ணாமலை ஆகியோர் வருகை தந்தனர். பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :- சேலத்தில் மாநாட்டை போடாதே என இதுவரை இயற்கை 4 முறை தள்ளிப்போட்டிருக்கிறது. இது இயற்கை கொடுக்கும் செய்தி. திமுகவை பொறுத்தவரை ஒரு நிமிடத்தில் முடிவு, இரண்டு நிமிடத்தில் அறிவிப்பு, மூன்றாவது நிமிடத்தில் தொண்டர்கள் ஏற்பார்கள். இதுதான் குடும்ப கட்சி, குடும்ப ஆட்சி.
திருச்சியில் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டுமென திமுகவினர் எதிர்பார்த்திருக்கிறார்கள். 2024 தேர்தலுக்கு பிறகு வயதானவர்கள் கட்சியில் எதற்கு என உதயநிதியை முதல்வராக்க ஒரு கூட்டம் சுத்திக்கொண்டிருக்கிறது, என விமர்சித்தார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.