CM ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… முதல்ல மருமகன்… இப்போ மகன் ; அண்ணாமலை சொன்ன தகவல்!!

கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாப்பம்பட்டி , அப்பநாயக்கன்பட்டி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை, 2024 இல் உலகிற்கு மோடி தேவைப்படுகிறார். கோவையில் இருந்து தாமரையை பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் படிக்க: அதிமுகவுக்கு ஓட்டு போடுறது வேஸ்டா? நாங்க ஓட்டுபோட்டுதான் அன்புமணி MP ஆனாரு: இபிஎஸ் விமர்சனம்!

சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அதிக அளவில் தேசியத்தின் பக்கம் உள்ளனர். மோடிக்கு மட்டுமே பிரதமர் நாற்காலியில் அமர தகுதி உள்ளது. ராகுல் காந்தி வயநாடு உத்தர பிரதேசம் என சுற்றி வந்து கொண்டிருக்கிறார். விளக்குகளை அனைத்து விட்டு 500 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள். தங்க சுரங்கத்தையே கொட்டினாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 500 முதல் 600 கோடி செலவு செய்ய இங்கு இரண்டு திராவிட கட்சிகளும் அமர்ந்திருக்கிறார்கள்.

நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய 970 கோடி ரூபாய் பணத்தை மூன்று மாதத்துக்கு முன்பு கொண்டு வந்துள்ளோம் என பேசினார்.

பின்னர் அய்யம்பாளையம் பகுதியில் உணவு இடைவேளையின் போது அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்கு பெரிய எதிர்ப்பு இல்லை. 1958 ல் போட்ட 2 ஒப்பந்தம், கேரள அரசு அவர்களின் ஒப்பந்தத்தில் நிறைவேற்றி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். திட்டத்திறற்கான வரைவு அறிக்கை தயார் செய்யவே 10,000 கோடி செலவாகும் என்பதால் பிரதமரை சந்தித்து, பாஜக வேட்பாளர்கள் நீலகிரி, திருப்பூரில் வென்றவுடன் உறுதியாக செயல்படுத்தப்படும்.

சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் வாழ முடியாது. நீர்நிலை வற்றி உள்ளது. நிலத்தடி நீர் 1000 அடிக்கு கீழ் உள்ளது, ஆனைமலை – நல்லாறு திட்டம் மட்டுமே தீர்வு, 100 நாட்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். ராகுல்காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது என்பது போக்குவரத்து விதிமீறல். அண்ணாமலை என்றால் திமுகவும் கோவை காவல்துறை கிளம்பி வருவார்கள்.

மேலும் படிக்க: ஓபிஎஸ் தரப்பு – பாஜகவினரிடையே மோதல்… ராமநாதபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு ; போலீசார் குவிப்பு

மூத்த அரசியல் தலைவர் ராகுல்காந்தியின் செயல் இளைஞர்களுக்கு என்ன கருத்தை சொல்கிறது. இதை திமுகவினரும் ஸ்டாலினும் கொண்டாடி வருகின்றனர். அண்ணாமலைக்கு ஒரு நியாயம், ராகுல்காந்தி ஒரு நியாயம். ராகுல்காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்தை நிலைநாட்டும் போது தான் சட்டத்தின் மீது மரியாதை வரும். ஸ்டாலினுக்கு தான் பயம் வந்துள்ளது.

ராகுல்காந்தி வயநாட்டிற்கு செல்லும்போது கம்யூனிஸ்ட் எதிர்த்து உள்ளனர். எல்லைத் தாண்டி இங்கு வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர் என்கின்றனர். இந்தியா கூட்டணியின் நிலை. ஸ்டாலின் அவர் மீது நம்பிக்கை இல்லாததால், ராகுல்காந்தி அழைத்து வருகிறார். அண்ணாமலையை தோற்கடிக்க திமுகவே இங்கு நின்றது. தோற்கடிக்க முடியாது என்பதால் ராகுல்காந்தியை அழைத்து வந்துள்ளனர். கோவை மக்களின் அன்பு மோடிக்கு உள்ளது, 60% வாக்குகள் கிடைக்கும்.

அதிமுக தொண்டர்கள் வெளியே வந்து கிராமத்தில் அனைவரும் பாஜகவில் இணைந்து மோடியின் பக்கம் வந்துள்ளனர். சூலூர், பல்லடம் பகுதிகளில் அதிமுகவை சேர்ந்த முக்கியமானவர்கள் பாஜக பக்கம் வந்துள்ளனர். களத்தில் வேலை செய்கின்றனர். அதிமுகவின் நிலையை அவர்கள் ஏசியிலிருந்து வெளியே வந்து எட்டி பார்க்க வேண்டும். தேசிய தேர்தல், பிரதமருக்கான தேர்தல், பிரதமர் வேட்பாளர் இல்லாமல் ஓட்டி வருகின்றனர்., நாளை பிரச்சாரம் முடிய உள்ளது.

களத்தில் பார்த்தால் அதிமுக வாக்கு வெளியே வந்துவிட்டது. அதிமுக மாய உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். எடப்பாடி, மூத்த தலைவர்கள் 1980களில் பாஜகவின் பலத்தை அனைத்து இடங்களிலும் பார்க்கலாம்., கூட்டணி தலைவர்கள் அவர்கள் வேட்பாளர்கள் போல் களத்தில் உள்ளனர். கட்சி முக்கியம் என்றாலும், பாஜகவின் வெற்றியை நடுநிலை வாக்குகள் தீர்மானிக்கிறது, அவர்கள் பாஜக பக்கம் செல்கின்றனர். ஜூன் 4 கள நிலவரம் பாருங்கள், பாஜக மிகப்பெரிய வெற்றிபெறும்.

தேங்காய் உற்பத்தி என்பது தமிழகம், கேரள, ஆந்திரா ஆகிய மாநிலங்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் கொடுக்கவில்லை. மத்திய அரசு கொப்பரை தேங்காய் வாங்கி, பாரத் தேங்காய் எண்ணெய் உருவாக்கி, நாங்களே ரேஷன் கடையில் கொடுக்க உள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் திமுக தேர்தல் அறிக்கை நிறைவேற்றவில்லை என சொல்ல தயாராக இல்லை.

நாங்கள் களத்திற்கு வந்து விட்டோம். தேங்காய் கொள்முதல் என்பது மாநில பிரச்னை. மாநில அரசு செவி சாய்க்க போவதில்லை. அதனால் பாரத் தேங்காய் திட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்தில் 2 இலக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி 10ஐ தாண்டி, ஒவ்வொரு நாளும் எழுச்சியால் 39 நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

நாங்கள் கட்சியில், கூட்டணியில் 25 இலக்கு வைத்துள்ளோம். கோவையில் பாஜக நம்பிக்கையாக வெல்லும் என சொல்வது போல் தமிழக அளவிலும் சாதகமாக வரும். சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். கோவை மத்திய ரயில் நிலையம் உலகம் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும். வாரணாசி போல் கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

கோவையில் முதல்வரின் மருமகன் உட்கார்ந்துள்ளார். நாளையிலிருந்து உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் உட்கார உள்ளார், தமிழகத்தின் புலனாய்வு பிரிவு இங்கு தான் உட்கார்ந்துள்ளனர். கணக்கு இல்லாமல் செலவழிக்கின்றனர். தண்ணீர் இருக்கோ, இல்லையோ, பணத்தை தண்ணீர் மாதிரி செலவழிக்கின்றனர். பணம் பலத்தை வைத்து திமுக வெற்றிபெற போவதாக நம்புகிறது. அதை உடைத்து நாங்கள் வெற்றிப்பெறுவோம். தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் மிகப்பெரிய வெற்றி பெறுவார், என தெரிவித்தார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

காஷ்மீரில் கொத்து கொத்தாக சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை : எந்த மதம் என கேட்டு சுட்ட தீவிரவாதிகள்..!

காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா…

15 minutes ago

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

16 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

16 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

17 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

17 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

17 hours ago

This website uses cookies.