வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர் மோடி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகத்தில் 2வது நாளாக சுற்றுப்பயணம் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவையில் ரோடு ஷோவில் பங்கேற்ற அவர், இன்று சேலத்தில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜிகே வசான், ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மேடையில் பொன்னாடை போற்றிய ராமதாஸை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார்.
தொடர்ந்து, பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- மூச்சு இருக்கும் வரை தேசம் முதன்மையானது என கருதுபவர் பிரதமர் மோடி. வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர்.
தொடர்ந்து 3வது முறையாக ஏழை தாயின் மகன் பிரதமர் மோடி ஆட்சியைப் பிடிப்பார். ராமதாஸின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி.
பாஜக கூட்டணியில் 400 எம்பிக்களுக்கு மேல் வந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நன்மைகள் ஏற்படும். 400 இடங்களுக்கு மேல் பாஜக வரும் போது தான் நாட்டில் இருந்து வறுமை ஒழிக்கப்படும், எனக் கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.