கரூர் : மக்களுடன் என்றும் பாஜக துணைநிற்கும் என்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மக்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நடந்தை ஊராட்சிக்குட்பட்ட, வேட்டையார்பாளையம் கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான மின்பாதைகள் அமைப்பு பணியும் செயல்பட்டு வரும் நிலையில், கிராமத்தில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
ஆனால், ஒரு புறம் சென்றால் கூட பரவாயில்லை. இருபுறங்களிலும் மரக்கிளைகளை வெட்டியும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அனுமதியோடு, இந்த தனியார் சோலார் மின் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அந்த பொதுமக்கள் பாஜக கட்சியிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடத்திற்கு தானே முன்வந்து சென்ற பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, இரு தினங்களுக்குள் இந்த பிரச்சினை தீர்ந்து விடும் என்று உறுதிபட தெரிவித்தார்.
அதே போல, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 13 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த திட்டமும் விரைவில் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். மேலும், அந்த பகுதியில் உள்ள 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தபால் அலுவலகம் மூலம் செல்வ மகள் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தானே தொடங்கி, அந்த திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தினை தனது சொந்த நிதியிலிருந்து கட்டுவதாகவும் அறிவித்தும் சென்றார்.
இந்த நிகழ்வின் போது கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மற்றும் பாஜக வினரும், சமூக நல ஆர்வலர்கள் பலர் உடனிருந்தனர்.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.