மதுரை மேலூரில் துள்ளிய ஜல்லிக்கட்டு காளையை தடவி கொடுத்து அமைதிப்படுத்திய அண்ணாமலையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலலாகி வருகிறது.
என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொணடு வரும் நிலையில், இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை துவங்கியுள்ளது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை கட்டி வரவேற்பு கொடுக்கும் விதமாக வைத்திருந்தனர். அப்பொழுது அண்ணாமலை காளை அருகே சென்ற போது எகிறி துள்ளியது. உடனே அதை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். இதனால், காளை அமைதியானது.
தொடர்ந்து பாதயாத்திரையானது சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி நகைக்கடை பஜார் , சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு, சென்று மேலூர் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றடைகிறது. வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.