பாஜக பிரமுகர் குஷ்பு இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்கக்கூடாது : விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் எச்சரிக்கை!!!!
பல ஆண்டுகளுக்கு முன், தமிழக திரைப்பட கலைஞர்கள் அவ்வப்போது இலங்கை சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கை. கடந்த, 2009ல் விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக முடக்கப்பட்ட பின், திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்வது படிப்படியாக குறைந்தது. அதற்கு அங்கு நிலவிய குழப்பமான அரசியல் சூழலே காரணம்.
சமீப காலமாக கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரைப்பட கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி நடத்தினார்.
நடிகை குஷ்பு, வரும், 21ல் யாழ்ப்பாணம் முற்றுவெளி மைதானத்தில் நடக்க உள்ள இசை நிகழ்ச்சியில், பாடகர் ஹரிஹரனுடன் பங்கேற்க உள்ளார்.
ஆனால், இலங்கைக்கு வரக் கூடாது என குஷ்புவுக்கு விடுதலை புலி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகை குஷ்பு பா.ஜ.,வில் தேசிய பொறுப்பில் உள்ளார். புலி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, ‘அந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தான்’ என, கருத்து கூறினார்.
இதனால், இலங்கையில் உள்ள புலி அமைப்பு ஆதரவாளர்கள் குஷ்புவை எதிர்ப்பாளராக கருதுகின்றனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழக நடன கலைஞர்கள், ‘சந்தோஷ் நாராயணன் நிகழ்ச்சிக்கும் இப்படி தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், போலீஸ் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
‘அதே போலவே, குஷ்பு, ஹரிஹரன் ஆகியோர் இணைந்து நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்படும்’ என்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.