திமுக அரசியல் செய்வதற்காக இந்திய ஜனாதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தி உள்ளதாகவும், திமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதையொட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது ;-புதிய கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடி காலத்தில் சாத்தியமாகி உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமுதாயம் முழுமையாக மாற வேண்டும் என்றால் பெண்களின் தேவை தேவைப்படுகிறது. பெண்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.
குறுகிய காலத்தில் கழிப்பிடம், வீடு, கேஸ் இணைப்பு, சுகதராமான நீர் போன்றவை கோடிக்கணக்கில் மத்திய அரசு பணம் ஒதுக்கி செயல்படுத்தி உள்ளது.பெண்களின் கல்வி, சுகாதாரம் போன்றவை முக்கிய பங்காக இருக்கும். 33% மசோதா நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், எனக் கூறினார்.
தொடர்ந்து, வாக்கு வங்கி பற்றி பேசும் திமுக எம்பி கனிமொழி, மூன்று நாட்களுக்கு முன்பு திமுகவில் தீர்மானம் போட்டுள்ளனர். அப்படி போடப்பட்ட தீர்மானம் யாரை ஏமாற்ற என கேள்வி எழுப்பினார். ஐக்கியா நாடுகளின் ஆய்வில் இந்தியாவில் பெண்களுக்கான சமூக பங்களிப்பு அதிக அளவில் இருப்பதாகவும், பெண்களுக்கான தலைமை பண்பு வெகுவேகமாக மாறிக் கொண்டிருப்பதாக கூறினார்.
பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களுக்கு காலங்காலமாக ஏற்பட்ட கஷ்டங்கள் போக்கி, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுள்ளார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் வைத்து திருமாவளவன் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, இதை வரவேற்க வேண்டும். திமுக அரசியல் செய்வதற்காக இந்திய ஜனாதிபதிக்கு அவமரியாதை ஏற்படுத்தி உள்ளனர். திமுக இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சாமி, கோவில்,பூஜை என்றாலே திமுகவினருக்கு ஒரு அலர்ஜி. திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது, எனக் கூறினார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.