சென்னை : நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த உடனே, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும், அரசியல் குறித்து வெளிப்படையாக எப்போதும் கருத்து கூறாத ரஜினி, அன்றைய தினம் ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று பளீச்சென கூறினார்.
ஆளுநர் ரவியுடன் அரசியல் பேச ரஜினிக்கு என்ன காரணம் வந்தது என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கின்றனர்.
எனவே, ரஜினியை பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, பிரதமர் மோடி, ரஜினியை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகின.
தற்போது சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக சமீபத்தில் ஒரு வார இதழில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, டெல்லி வட்டாரத்தில் இது உறுதி செய்யப்படுகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.