காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை சூளைமேடு கில் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்று திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.
அவருடைய கருத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். காங்கிரஸ் கட்சி குடியரசு தலைவர் தேர்தலின் போது குடியரசுத் தலைவரின் நிறம் மற்றும் தோல் ஆகியவற்றின் காரணமாகத்தான் வாக்களிக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பாஜக மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. அது ஒரு கொச்சையான குற்றச்சாட்டு, என்றார்.
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ளுமா..? என்ற மோடியின் பேச்சு என்பது பேராசை எனவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுகவும் ஒற்றுமையாக உள்ளது. 39 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறும், என்றார்.
மேலும் படிக்க: 5 வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம்… சமூக வலைதளங்களில் வெளியான தகவல் ; சென்னை மாநகராட்சி மறுப்பு..!!
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண விவகாரத்தில், அது கொலையா..? தற்கொலையா..? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தொடங்கி ஓரிரு நாட்களே ஆவதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.
நிச்சயமாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஜெயக்குமார் மரண விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியாது, என்றார்.
இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் இரண்டு மாதம் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை யோசிக்க வைக்கிறது, என்றார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.