இந்தியாவில் அதிபர் ஆட்சி கொண்டு வர பாஜக திட்டம் : ஆதாரங்களுடன் சந்தேகத்தை கிளப்பிய திமுக எம்பி ஆ.ராசா!!

இந்தியாவில் அதிபர் ஆட்சி கொண்டு வர பாஜக திட்டம் : ஆதாரங்களுடன் சந்தேகத்தை கிளப்பிய திமுக எம்பி ஆ.ராசா!!

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி அனைவரையும் வரவேற்றார். சட்டமன்ற தொகுதி எம்எல்ஏக்கள் (குளித்தலை) மாணிக்கம், (லால்குடி) சௌந்தரபாண்டியன், (மண்ணச்சநல்லூர்) கதிரவன், (துறையூர்) ஸ்டாலின் குமார், (பெரம்பலூர்) பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், தர்மன் ராஜேந்திரன் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்பி.சிவா பேசும்போது வர இருக்கின்ற தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காக்கக்கூடிய தேர்தல் என்பதை மக்கள் உணர வேண்டும்.

ஒரு மொழியை சிதைத்தால் ஒரு சமூகத்தை ஒரு மாநிலத்தை சிதைக்க முடியும். அந்த வகையில் இந்தி எனும் மொழியை இந்தியாவின் ஒட்டுமொத்த மொழியாக மாற்ற பாரதிய ஜனதா கட்சி துடிக்கின்றது. எனவே இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய எம்பி.ராசா பாரதிய ஜனதா கட்சி அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கான திட்டத்தை வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் எனக்குள் ஏற்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது பாரத பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வருவதில்லை அவ்வாறு வந்தால் தான் நாட்டில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை அவர் அறிந்து கொள்ள முடியும் நாட்டில் உள்ள பிரச்சனைகள் எதையும் அறியாமல் அவர் ஊர் சுற்றும் ஒரு பிரதமராக உள்ளார்.

நாட்டு மக்களை அடிமையாக்க துடிக்கும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்க வேண்டும். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் இந்தியா கூட்டணி வெற்றி வாய்ப்பை உறுதி படுத்த வேண்டும் என்று கூறினார்.

அமைச்சர் சிவசங்கர் பேசும்போது தமிழக முதல்வர் கட்டமைத்துள்ள இந்தியா கூட்டணி மிக பெரிய மகத்தான வெற்றியை சந்திக்க இருக்கிறது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண் நேரு மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு பேசும் போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு ஆகும்.

அரசியல் பணிகளை அருகில் நின்று பார்த்து உள்ளேன். ஆனால் தற்போது அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்கள் பணியாற்ற உள்ளேன். எனவே வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி தலைமையிலான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும் என்று கூறினார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேரு வெற்றி பெறுவதற்கு நீங்கள் முழுமையாக பாடுபட வேண்டும்.

செயல் வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகம் செய்து வைத்த அனைவருக்கும் நன்றி. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சுஜாதா, மாவட்ட தலைவர் கலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜெயசீலன், மதிமுக கட்சி சேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி இரா.வனன் (எ) ராஜேஷ் உட்பட கூட்டணி கட்சி செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

15 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

16 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

16 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

17 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

17 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

17 hours ago

This website uses cookies.