சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், கடையின் ஊழியர், வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரி பாய் என மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், பையில் குண்டை வைத்து தாககுதல் நடத்திய நபரின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் கோவையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். ஆனால், எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறை மின்னஞ்சல் முகவரிக்கு bomb blast in Chennai temple soon என்று jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து. சென்னை பெருநகர காவல்த்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ள நிலையில்,மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பல கோயில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது. அதாவது, ‘Bomb Blast in Chennai Temple Soon’ என jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கும் மெயில், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.