சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட டையாளம் தெரியாத நபர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில், வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டனை என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் மிரட்டல் விடுத்த மணிகண்டன் மனநல பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதற்கு முன், மனநல பாதிக்கப்பட்ட மணிகண்டன் பலமுறை வெடி குண்டு மிரட்டல் புகாரில் கைதானவர் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து உடனடியாக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் மிரட்டல் விடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
This website uses cookies.