தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் போனக்கல் பகுதியில் அசோக் என்பவர் சாய்பாபு கோயில் முன்பு தனது மனைவியுடன் பிச்சை எடுத்து வருகிறார்.
பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் அவர் தனது மகள் படிப்பிற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் ஓட்டல் அதிபர் நரசிம்மராவ் என்பரின் ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் நரசிம்மராவ் உன்னிடம் பணம் இருந்தால் தன்னிடம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி உள்ளார்.
இதனால் அசோக் வட்டிக்கு ஆசை பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த ₹ 50,000 கடனாக வாங்கினார். இதற்கான வட்டியை சில மாதம் கொடுத்த நரசிம்மராவ் அதன்பிறகு வட்டி கட்டவில்லை. பணம் கட்டால் நரசிம்மராவ் கடனைத் திருப்பித் தர மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நரசிம்மராவ் பல இடங்களில் கடன் வாங்கியதால் ₹ 1.95 கோடி கடன் ஏற்பட்ட நிலையில் பிச்சைக்காரர் அசோக்குடன் சேர்த்து 69 பேருக்கு வழக்கறிஞர் மூலம் பணத்தை திருப்பி தர முடியாது என்னிடம் எதுவும் இல்லை என ஐபி நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்காக கம்மம் சிவில் நீதிமன்றத்தில் திவால் மனு வழக்கு தாக்கல் செய்தார். அதில் ₹ 1 கோடியே 95 லட்சம் கடன் வாங்கிய நிலையில் அதனை கட்டும் நிலையில் இல்லை என 69 பேருக்கு ஐபி நோட்டீஸ் கொடுத்துள்ளார். நோட்டீஸ் பெற்றவர்களில் பிச்சைக்காரன் அசோக் பலரும் கண்ணீருடன் உள்ளனர்.
வியாபாரி நரசிம்மராவ்வை நம்பி பல வருடங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்கினால் இப்படி ஏமாற்றி விட்டதாக பிச்சைக்காரர் அசோக் கூறி உள்ளார்.
அசோக், தன் மகள் படிக்க சேமித்த பணத்தை பெற்று தர வேண்டும் என கூறும் நிலையில் நரசிம்மராவ் பிச்சைக்காரை கூட விட்டு வைக்காமல் கடன் பெற்று ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.