பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை…ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்..!!

திருவாரூர்: நன்னிலம் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன் வயது 25. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில்  கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது தன்னிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓவர்சியர் மகேஸ்வரன் என்பவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் ஒன்று மற்றும் இரண்டாம் தவணைப் பணம் பெறுவதற்கான வீட்டு வேலையை அவர் முடித்திருக்கிறார். இரண்டாவது தவணைக்கான பணம் வங்கி கணக்கில் ஏறியவுடன் அதிலும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக மகேஸ்வரன்  கேட்டதால் அதையும் மணிகண்டன் கொடுத்துள்ளார்.

பின்னர் மூன்றாவது தவணை பணம் ஏற்றுவதற்கான வேலையை முடித்த பின்னரும் வீட்டின் ரூப் வேலையை முடித்தால்தான் மூன்றாம் தவணை பணம் ஏற்ற முடியும் என்று ஓவர் சியர் மகேஸ்வரன் கூறியதால் தான் வெளிநாடு செல்ல வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 36 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று கம்பி வாங்கி வீட்டின் ரூப் வேலையை முடித்ததாக  தெரிகிறது.ரூப் வேலை முடிந்தும் மூன்றாவது தவணை பணம் ஏற்றி விடாமல் ஓவர்சியர் மகேஸ்வரன் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து லஞ்சம் வாங்கிய ஓவர்சியர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மணிகண்டன் தற்கொலைக்கு முன்பு இதுகுறித்து வெளியிட்ட வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து பேரளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.