டிரெண்டிங்

தோனி சாதனையை அசால்ட்டா முறியடிச்சிட்டாரே : 2வது இன்னிங்சில் இரண்டு சதம்.. பொளந்து கட்டிய இந்திய வீரர்கள்!

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. குறிப்பாக அஸ்வின் சதம் அடித்து விளாசினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் இந்திய வீரர்களின் பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 149 ரன்னில் சுருண்டது.

பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய 3-வது நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன் அரைசதம் அடித்தனர்.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் ரஷிப் பண்ட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவரின் 6-வது சதம் ஆகும். இதன்மூலம் டோனி சாதனையை சமன் செய்தார்.

மேலும் படிக்க: விதியை மாற்றுவோம் விக்கிரவாண்டியில்.. திமுக அதிமுகவுக்கு நிகராக களமிறங்கும் த.வெ.க?!!

டோனி விக்கெட் கீப்பராக 6 சதம் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் தற்போது சமன் செய்துள்ளார். ரிஷப் பண்ட்டை தொடர்ந்து சுபமன் கில் சதம் அடித்தார்.

இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் 119 ரன்னுடனும், கே.எல். ராகுல் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

17 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

26 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

51 minutes ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

1 hour ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago

This website uses cookies.