இரும்பு திருடிய இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் : 23 வயது இளைஞர் பலியான கொடூரம்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

சென்னை : கட்டிட வேலை நடந்த போது இரும்பு திருடியதாக 23 வயது இளைஞர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் மைதானம் அருகே புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

கட்டிடம் கட்டதேவையான இரும்பு கட்டுமான பொருட்களும் அங்கே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் கட்டிட பகுதிக்கு சென்று அங்கிருந்த இரும்பு பலகையை திருடிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றது.

இதை அங்கு தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு தங்கிஇருந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஒன்றிணைந்து கொள்ளையர்களை விரட்டினர். அப்போது, இருசக்கர வாகனத்தின் நடுவே அமர்ந்திருந்தவர் தப்பினார்.

வாகனத்தை ஓட்டியவர், பின்னால் அமர்ந்து திருடப்பட்ட இரும்புபலகையை பிடித்துக் கொண்டிருந்தவர் என இருவர் தொழிலாளர்களிடம் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, பிடிபட்ட திருடர்கள் இருவரையும் கட்டி வைத்து இரும்புகம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையில், இருசக்கர வாகனத்திலிருந்து தப்பியவர் நடந்த சம்பவம் குறித்து பிடிபட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் சைதாப்பேட்டை போலீஸாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து சைதாப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில், இரும்பு திருடச் சென்றது சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சாகின்ஷா காதர் (வயது 23), அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (வயது 20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

இதில், நடுவில் அமர்ந்த ஹேமநாதன் தப்பி ஓடிய நிலையில் இருசக்கரவாகனத்தை ஓட்டிய 16 வயது சிறுவன், திருடப்பட்ட இரும்புபலகையை பின்னாலிருந்து பிடித்திருந்த சாகின்ஷா காதர் இருவரும் பிடிபட்டு தாக்குதலுக்கு ஆளாகினர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சாகின்ஷா காதர் உயிரிழந்தார். 16 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை தொடர்பாக கட்டிட பொறியாளர்களான உமா மகேஷ்வரன் (வயது 33), ஜெயராம் (வயது 30), நம்பிராஜ் (வயது 29), பாலசுப்பிரமணியன் (வயது 29), சக்திவேல் (வயது 29), மனோஜ் (வயது 21), அஜித் (வயது 27), தொழிலாளி சிவபிரகாசம் (வயது 22) ஆகிய 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

17 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

17 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

18 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

18 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

19 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

19 hours ago

This website uses cookies.