பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; கைதான ரௌடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை,..
Author: Sudha14 ஜூலை 2024, 9:29 காலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் மாதவரத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களையும் 5 நாட்களாக போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு திருவேங்கடம் மாதவரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, எஸ் ஐ ஒருவரைத் தாக்கி தப்பிக்க முயன்று உள்ளார்.இதனால் ஒரு போலீஸ் குழு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு டாக்டர்கள் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட் சாலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தென்னரசு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் திருவேங்கடமும் ஒருவர்.
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார்.
0
0