பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் மாதவரத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களையும் 5 நாட்களாக போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு திருவேங்கடம் மாதவரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, எஸ் ஐ ஒருவரைத் தாக்கி தப்பிக்க முயன்று உள்ளார்.இதனால் ஒரு போலீஸ் குழு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு டாக்டர்கள் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட் சாலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தென்னரசு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் திருவேங்கடமும் ஒருவர்.
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.