மதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரண்டு பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன் வாழ்த்து சொல்ல வந்தது மனதில் ஒரு எழுச்சியையும், ஊக்கத்தை தருகிறது. மதிமுகவில் 1401 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர்,
மதிமுகவின் 29வது பொதுக்குழு வருகிற ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் கூறினார். இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இன வெறியுடன் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி சிறப்பாக செயல்படும் என வாழ்த்து தெரிவித்தார்.
விழுப்புரம் மேல்பாதி ஊரில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும் பெண் ஒருவரையும் உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் மதிமுக சார்பாக துரை வைகோ பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.