இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க கனடா முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா இதற்கு ஆதரவு தெரிவிப்பது போல கருத்து கூறியுள்ளது.
கனடாவில் சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலையான விவகாரம் விஸவரூபம் எடுத்துள்ளது.
இந்த கொலைக் குற்றத்துக்கும் இந்தியாவுக்கு தொடர்பு உண்டு என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டிய நிலையில், இந்தியா இதை மறுத்துள்ளது.
இந்த விவகாரம் இரு நாடுகளிடையே விரிசல் ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த கனடா முடிவு செய்துள்ளது.
இதனால் இந்திய தூதரை திரும்பப் பெற இந்தியா முடிவு செய்த நிலையில், டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.
அதே சமயம் கனடாவில் உள்ள 6 இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரிவிட்டுள்ளது. இதனால் மோதல் போக்கு இருநாடுகளிக்கிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லாம் மேஜையில் உள்ளது என ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார். அப்படியென்றால் பொருளாதாரத் தடை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளதாகவே அர்த்தம்.
இந்த நிலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. நிஜ்ஜார் கொலையில் கனடா கூறிய குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம்,…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
சென்னையில், பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம், வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகரின் கோயம்பேடு…
கத்தி முடினையில் இளம்பெண்ணை கற்பழித்த போதை ஆசாமி வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…
This website uses cookies.