மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்க அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணை நடைபெற்றன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு குறித்த தீர்ப்பை நீதிபதிகள் வாசித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உர்ததரவிட்டனர்.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசும் போது, டெண்டர் புகார் பொய் என்பதை ஆரம்பித்தில் இருந்தே கூறி வந்தோம். மேலும் திமுகவின் பீ டீம்மாக செயல்பட்ட அறப்போர் இயக்கம் தான் கூறியது. தற்போது அந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கும் ஒண்ணுமில்லாமல் போகும், அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.