அமைச்சர் உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு? அமித்ஷா போட்ட புது கணக்கு!!!

சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு ஆளானது. உதயநிதிக்கு எதிராக இந்தியா முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ஊடகப் பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ் பிரசாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தின் புனிதத்தை இழிவு படுத்தும் வகையில் சனாதன தர்மம் குறித்து தவறான, ஆபத்தான, கருத்துக்களை வெளியிட்டு தேச ஒற்றுமைக்கும், மக்களின் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி மத வேற்றுமையை உருவாக்கி மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்து மதத்தின் புனிதத்தை விளக்கக்கூடிய சனாதன தர்மம் மனித வாழ்வியலின் அற்புத நெறிமுறைகளை விளக்கும் பெருமைமிகு உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய மானுட தத்துவம். இது குறித்து படித்து தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு கருத்துக்கள் கூறலாம்.

சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் லாபத்திற்காகவும் சனாதன தர்மம் குறித்து எதுவும் தெரியாமல், உள்நோக்கத்துடன் மத உணர்வுகளை தூண்டிவிட்டு மாற்று மதத்தினர் வாக்குகளை பெற சமூகத்தின் அமைதியை கெடுத்து சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்க முயலும் திமுக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

அரசியல் சுயநலத்திற்காக இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதையும், இந்துக்களிடைய பிரிவினைவாதத்தை தூண்டுவதையும் இனி அனுமதிக்க கூடாது. தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், மதக் கலவரத்தை , வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வரும் அமைச்சர் உதயநிதி மீதும், மத வேற்றுமையை உருவாக்குவதில் பரப்பப்பட்ட இந்த பிரிவினைவாத செய்தியின் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முழுமையாக விசாரிக்க வேண்டும்

மேலும் அமைச்சர் உதயநிதி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேச ஒற்றுமைக்கு குந்தகம் நடத்த ஏதேனும் சரி நடந்ததா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

6 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

7 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

8 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

8 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

8 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

10 hours ago

This website uses cookies.