கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் போக்குவரத்து காவலரிடம் வழக்கறிஞர் ராபர்ட் என்பவர் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கும்பகோணம் பழைய பால பகுதி கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் பல்வேறு நெருக்கடிகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். குடிபோதையில் வந்து தகராறு செய்வது, வாகன விபத்து உள்ளிட்டவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில்,வழக்கறிஞராக இருக்கும் ராபர்ட் என்பவர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் ராபர்ட் மிகுந்த இடையூறை ஏற்படுத்தியதால் துர்கா என்ற பெண் காவலர் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்காமல் பெண் போலீசிடம் வம்பிழுத்து தனது சட்டை பட்டனை கழற்றியபடி ஒருமையில் பேசியுள்ளார்.
இதனையடுத்து துர்கா அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.